மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்( வள்ளல் தன்மையுள்ள ஐந்து சிவன் கோவில்களின் வரலாறு )

வள்ளல் தன்மையுள்ள ஐந்து சிவன் கோவில்களின் வரலாறு 

இந்த ஐந்து சிவன் கோவில்கள் மயிலாடுதுறை மாவட்டடத்தை சுற்றி உள்ளன. இந்த கோவில்களில் அனைத்தும் பஞ்சபூத குரு கோவில்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.இவற்றின் தல வரலாறை இங்கு படிக்கலாம்.

  • மயிலாடுதுறை 
  • மூவலூர் 
  • பெருஞ்சேரி 
  • விளநகர் 
  • மயிலாடுதுறை வள்ளலகரம்
தல வரலாறு:
    சிவபெருமானே அவமதிக்கும் எண்ணி தட்சன் ஒரு யாகம் நடத்தினான் ,அந்த யாகத்தில் சிவபெருமானின் பேச்சைக் கேளாமல் பார்வதி தேவி கலந்துக்கொண்ட தேவியே சபித்துவிடுகிறார் அந்த சாபம் தீர அம்பிகை மயில் உருவம் கொண்டு சிவனே வழிபட ,சிவபெருமானே ஆண் மயில் கொண்டு உருவம் கெளரி தாண்டவம் ஆடி கைலாயத்திற்கு சென்றதாக தல வரலாறு.
ஏழு ஜென்மம் பாவம் போக்கும் சிவன் :
    கங்கை , யமுனா , சரஸ்வதி ஆகிய மூவரும் மக்களின் பாவக்கரைகள் படிந்து சண்டாள கன்னிகளை போல இருந்தனார் , கண்ணுவ முனிவரியிடம் வேண்ட , துலாக்கட்டத்தில்  நீராடி மயூரநாதரை வழிபட்டு சுயஉருவம் பெற்றனர்.
முடவன் முழுக்கு: 
                        வட நாட்டை சேர்ந்த முடவன் துலாக்கட்டத்தில் நீராட வந்தான் , 
மாயவரம் வருவதற்குள் ஐப்பசிமுடிந்து விட மயூரநாதரிடம் வேண்ட கார்த்திகை முதல் நாள் நீராடனிலும் 
துலா மாதம் முழுவதும்  நீராடிய  பலன் உண்டு.
நாதசர்மா மட்டும் அனவித்யாம்பிகை :
    நாதசர்மா மற்றும்  அனவித்யாம்பிகை திருவையாற்றை  சேர்த்த இந்த தம்பதிகள் தினமும்  ஐயாறப்பர் சுவாமியை தினமும் வணங்குவது வழக்கம்.
இருவரும் மயிலாடுதுறை சென்று மயூரநாதரை வணங்கி , அன்றைய தினமே  ஐயாறப்பர் வணங்க  நினைத்தனர் , நேரமாகிவிட்டதால் ஐயாறப்பர் வணங்க இயலாமல் முடியாமல் நினைத்து  வருத்தமுற்றனர்.முக்தி அளிக்க நினைத்த சிவபெருமான் அவர்கள் முன் தேன்றி , மயூரநாதர் கோவிலின் எதிர் திசையில் ஐயாறப்பர் சமேத  அறம் வளர்த்த நாயகி வீற்று இருக்க அங்கு சென்று வணங்கி முக்தி அடைவாய். அத்தம்பதிகள் முக்தி அடைந்த லிங்கங்கள் நாதசர்மா மற்றும் அனவித்யாம்பிகை என்று அழைக்கப்படுகின்றன அவையம்பாள் சந்நிதிக்கு அடுத்துள்ள  இந்த லிங்கத்திற்கு புடவை மட்டும் சாற்றப்படுகிறது .
குதம்பை சித்தர் :
    குதம்பை சித்தர் இறைவனிடம் ஐக்கியம் இடம். அகத்தியர்  வழிபட்ட சந்தன பிள்ளையார் இருக்கிறார் 
கோவில் அமைப்பு :
    இந்த கோவில் ராஜகோபுரங்களாய் கடந்து இடதுப்புறம் திருக்குளம் உள்ளது  வலப்புறம் கணபதியும் பலிபீடமும் , இடதுபுறம் முருகன் பலிப்படமும் உள்ளது 
மயூரநாதர் சன்னதிக்கு செல்லும் பொது அதிகார நந்திகேசுஸ்வரர் , சப்தகன்னிகள் , முருகன் , சகஸ்ர  லிங்கம் , மஹாவிஷ்ணு பூஜிக்கும் லிங்கம் எமலிங்கம் இந்திரலிங்கம் , வாயு , வருண , பிரும்ம லிங்கம் , துர்கை நடராஜர் உள்ளன.நவகிரஹங்கள் ஆன சந்திரன் , சூரியன் , சனி பூஜிக்கும் லிங்கம் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளனர்.  அபயாம்பிகை சந்நிதி வடக்கை ஆதி மயூரநாதர் சந்நிதி உள்ளது , தன்னை நாடி வரும் பக்தர்கள் அபாயத்தை போக்கி நல்லருள் பெற வைப்பவள்.  ஆடிப்புர அம்மன் உள்ளது. மயூரநாதர் சந்நிதிக்கு வெளியில் அனைத்து  ராசிக்குமான  ஓவியம் செதுக்கப்பட்டுள்ளது .
வள்ளல் தன்மை :
    கேட்ட வரங்களை வாரி வழங்கும் வள்ளல் தன்மை உடையவர் மயூரநாதர். இவரை சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு வள்ளல் தன்மை உள்ள கோவில்கள் உள்ளன .இங்கு வழிபட ஏழு ஜென்மத்தில் செய்த பாவங்கள் விலகும் , தம்பதியின் ஒற்றுமையாக  இருக்கவும் , துலாம் ராசியினரும் வணங்கலாம். 

 இறைவன் பெயர் :மயூரநாதர் சுயம்பு லிங்கம் , 
 இறைவி                     : அவையம்பாள் 
 தலவிருட்சம்           : மாமரம்
 பதிகம்                       :திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 2,அருணகிரிநாதர். 
கோவில் முகவரி: 
                                        அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் 
                                         மயிலாடுதுறை மாவட்டம். 

கோவிலின் முகப்பு 



1 கருத்து:

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...