தல வரலாறு :
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மயிலாடுதுறைக்கருகிலுள்ள சித்தர்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இந்த தலத்தில் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி உள்ளது.இக்கோயில் கருவறையின் சுவரில் 63 சிவலிங்கமும் இது குறித்த கல்வெட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன .
சீகாழி சிற்றம்பல நாடிகள்
திருச்செந்தூர் முருகனின் அருளால் சிற்றம்பல அடிகள் ஞான சித்திய பெற்றார் அவரோட ஆறுபத்தி நான்கு (64) சீடர்களும் இருந்தனர் .
கண்ணப்பனார் விலகல்
ஒரு முறை விருந்தின் போது பருப்பு நெய்க்கு பதிலாக வேப்ப எண்ணெய் தவறுதலாக ஊற்றி விட கண்ணப்பர் தவிர மற்ற அனைவரும் உணவை உட்கொண்டனர் .கண்ணப்பர் மட்டும் கசப்புத் தன்மை தெரிகிறது வேப்ப எண்ணையை ஊற்றி விட்டர்கள் என்றார் .குரு நம்முடைய கூட்டத்தில் கண்ணப்பருக்கு மட்டும் போதிய ஞானம் வரவில்லை என கூற , அவர் கூட்டத்தை விட்டு சென்றார் .
ஜீவ சமாதி அடைய விருப்பம்
இந்த நிலையில் சிற்றம்பல அடிகள் சித்தரை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று ஜீவ சமாதி அடைய சோழ மன்னரிடம் இடம் கேட்டார்.அவரும் காவேரி கரை மேற்கில் இடம் ஒதுக்க குருவும் அவருடைய சீடர்களும் இறைவினிடம் ஐக்கியம் ஆனார்கள்.
கண்ணப்பர் ஆட்கொள்ளுதல்
இதனை கேள்வியுற்ற கண்ணப்பர் வர ,குருவே என்னையும் ஏற்று கொள்ளுங்கள் என்று கண்ணீர் வடிக்க , சித்தர் வெளிப்பட்டு அவர் இரு கைகளாலும் அவரை தழுவி ஆட் கொண்டார் .
கோவில் அமைப்பு :
கிழக்கு நோக்கிய சிவபெருமான் மற்றும் ஜீவ சமாதி உள்ளது .கருவறையின் வெளியில் 63 லிங்கங்கள் சீடர்களின் நினைவாக செதுக்க பட்டுள்ளன .விசாலாட்சி , மஹாவிஷ்ணு , முருகன் , கணபதி , பைரவர் , நவக்கிரக சன்னிதி சனி சூரியனை , சண்டிகேஸ்வரர் உள்ளனர் .
இறைவன் :பிரம்மபுரீஸ்வரர்.
இறைவி :திரிபுரசுந்தரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக