தல வரலாறு:
சிறுத்தொண்டர் கர்வம் :
பிள்ளைக்கறி செய்து சிவப்பெருமானுக்கு அமுதிட்ட சிறுத்தொண்டர் நாயனாருக்கு தான் மட்டும் இது போன்ற ஒரு காரியம் செய்து உள்ளதாக கர்வம் கொள்கிறார் . இதனை அறிந்த நந்தி அவரை கயலைமலையில் அனுமதிக்கவில்லை . சிறுத்தொண்டர் தவறே உணர்த்த சிவபெருமான் சிலவதி விழுந்து வரும் முட்டம் வாழ்ந்து வரும் பகுதிக்கு வருகிறார்.
சீலவதியும் சிவத்தொண்டும் :
அந்த ஊரில் சிலவதியும் அவளின் மகனும் வாழ்ந்து வருகின்றனர் ,மகன் மாடு மேய்த்து வரும் வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்த , அந்த நிலைமையிலும் தினம் ஒரு சிவன் அடியார்க்கு உணவளித்து பின் அவர்கள் உண்பது வழக்கம் .
ஒரு நாள் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க , சிவபெருமானே வேறு உருவம் கொண்டு சிறுவனிடம் நான் மாடுகளை பார்த்து கொள்கிறான் , நீ போய் சாப்பிட்டு வா என்கிறார் .அதற்கு சிறுவன் முன் பின் தெரியாதவரை நம்பி போக மாட்டேன் என்று உரைக்க , பெருமாள் சிறுவனுக்கு தெரிந்தவர் போல வர சாப்பிட செல்கிறான்
சேந்தங்குடி
ஹரியும் சிவனும் சேர்ந்து வந்தால் சேந்தங்குடி என அழைக்கப்படுகிறது . சிவன் அடியார்க்கு உணவு வழங்கமால் தான் மகன் அமர்ந்து இருப்பதை கண்டு உலக்கையால் அடிக்க மகன் இறந்துவிடுகிறான்
சிவன் அடியார்வருகை :
சிவன் அடியார் வர, சீலவதி உணவு பரிமாற , உன் மகன் வந்தால் தான் உண்பேன் என கூற , நடந்ததை சொல்ல சிறுத்தொண்டர் தான் கர்வத்தை விட , அந்த சீலவதி மகனை உயிர்ப்பித்தார் சிவபெருமான் .
கழுக்காணி முட்டம்
உலக்கை என்றால் கழுக்காணி , கழுக்காணி முட்டம் என. அழைக்கப்படுகிறது .பைரவி தன்னுடைய திசை வேண்டி வழிபட்ட இடம் .இங்கு சீலவதிக்கு சிலை காணப்படுகிறது .இக்கோவில் புதுப்பிக்கபட்டு கணபதி , ஆகர்ஷண பைரவர் , குரோதன பைரவர் , முருகன் , அம்மன் சந்நிதியும் உள்ளது .இறைவன் கிழக்கு நோக்கியும் உள்ளார் .
இறைவன்- பசுபதீஸ்வரர்
இறைவி பரமகல்யாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக