திருவிடைக்கழி முருகன் ஆலயம்

தலவரலாறு  

முருகன் வழிபட்ட தலம் :

    திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரனே வதம் செய்யும் போது , சூரனினின் மகன் ஹிரண்யாசுரன் தாத்தாவின் திதி அளிக்கும் வேண்டும் என்று மீன் வடிவம் கொண்டு தரங்கம்பாடி கடலில் இருந்தான் .இதனை அறிந்த முருகப்பெருமான் அவனை தேடி வதம் செய்து முடித்தார். ஹிரண்யாசுரன் ஒரு சிவபக்தன் , அவனே கொன்றதால் பாவம் வந்து சேர்ந்தது. முருகனுக்கு அதனை போக்க குரா மரத்தின் கீழே இருக்கும் சிவபெருமானே பூஜை செய்தார் .சிவபெருமான் முருகனின் பாவத்தை போக்கி தனக்கு முன்னால் அமர்ந்து இருந்து பக்தர்களின் பாவத்தை நீக்க வேண்டும் என்றார் .கருவறையில் முருகனின் சிலைக்கு பின் சிவபெருமான் லிங்க வடிவம் காணப்படுவது சிறப்பு .கல்வெட்டில் முருகனுடைய பெயர் திருக்குராத்துடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

முருகனின் காலடி பட்ட தலங்கள்

    முருகனின் காலடி பட்ட தலங்கள் இரண்டு மட்டுமே அதில் திருவிடைகழி ஒன்று .தான் பாவம் போக்க விடை தேடி வந்தால் திருவிடைக் கழி என அழைக்கப்படுகிறது .மற்றொன்று முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்த வள்ளிமலை.

ராகு வழிபட்ட தலம் 

    ராகு தேவன் இங்குள்ள குரா மரத்தின் அடியில் அமர்ந்து முருகப்பெருமானே வழிபட்டார் .இங்கு வந்து வழிபட ராகு தோஷம் விலகும் .

சேந்தனார் முக்தியடைந்த இடம் 

    சேந்தனார் முக்தி அடைந்த தலம், திருப்பல்லாண்டு பாடி சேந்தனார் , முருகனே வழிபட்டு இங்குள்ள குரா மரத்தின் கீழ் தைப்பூசம் அன்று முக்தி அடைந்தார் .அன்றைய தினம் இவருக்கு அபிஷேகம் நடைபெறும் .

கோவில் அமைப்பு 

கிழக்கு நோக்கி ஏழு நிலை ராஜகோபுரம் கொடி மரத்தின் அடி யில் கணபதி மட்டும் இல்லாமல் முருகன் சேர்ந்து இருப்பது சிறப்பு.சர்வமும் சிவமயம் என்பது போல, இந்த தலத்தில் சர்வமும் முருகன் ஆவார் இங்குள்ள கணபதி முதல் சோமதஸ்கந்தர் , சண்டிகேசுஸ்வரர் , என அனைவரும் வஜ்ர வேலுடன் காட்சி தருவதும் , நவக்கிரகங்கள் இல்லாதால் இத்தலத்து முருகனே நவகிரஹ தோஷம் போக்குவார் .

முருகன் வழிபட்ட பலிபீடம் (பத்ர லிங்கம்) , கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும்,  தட்சிணாமூர்த்தியும்(தெற்கு), பின்புறம் பாபநாசப் பெருமானும்(வடக்கு),வசிஷ்ட லிங்கமும் காட்சி தருவது சிறப்பு .கோவிலை சுற்றி நான்கு திசையிலும் அய்யனார் கோவில் இருக்கிறது .

ஆடி கிருத்திகை , புரட்டாசி முதல் வெள்ளி கிழமை பல்வேறு ஊரில் இருந்து நடந்து வருகின்றனர் .ராகு தோஷம் நீங்கவும் , விரைவில் திருமணம் நடை பெறவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.இங்கு முருகனுக்கு மயிலுக்கு பதில் யானை வாகனமாக இருக்கிறது .

இறைவர் :காமேசுவரர்

இறைவி :காமேசுவரி

தல மரம்:குரா மகிழம்


கருவறை அமைப்பு 


1 கருத்து:

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...