திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர்

தல வரலாறு :

குழந்தை வரம் வேண்டல் 

    மிருகண்டு முனிவரும் அவரது மனைவியும் குழந்தைவரம்  வேண்டி இத்தலத்து சிவனை வழிப்பட்டனர்  .சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி நீண்ட ஆயுள் உள்ள தீய  குணம் உள்ள குழந்தையா அல்லது பதினாறு வயது மட்டும் உடைய நல்ல குணம் கொண்ட குழந்தையா ?என கேட்டார் இருவரும் நல்ல குணம் உள்ள குழந்தை வேண்ட பிறந்தது. அதற்கு மார்கண்டயன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர் .அவனும் சிறந்த சிவபக்தனாக இருந்தான். 

எமன் சம்காரம் 

    மிருகண்டு முனிவர் அவனின் ஆயுள் முடியும் காலத்தை கூற , அவனும் அந்த நாளன்று சிவ பூஜை செய்ய , எமன் வந்து பாச கயிற்றை வீச , மரக்கண்டயன் சிவபெருமானினின் லிங்க திருமேனியை தழுவிக்கொண்டான் .பாச கயிறு சிவபெருமான் வீழ , கோவம் கொண்ட ஈஸ்வரன் லிங்க திருமேனில் இருந்து வெளிப்பட்டு எமனை  சம்காரம் செய்தார் .இன்றளவும் லிங்கத்தில் தழும்புகள்  உள்ளதை அபிஷேகத்தின் போது  காணலாம். சிவபெருமானின் வீரம் வெளிப்பட்டதால் இது அட்ட வீரேட்ட தலங்களில் இது கடைசியாக உள்ளது.

கள்ள பிள்ளையார்

    கள்ள பிள்ளையார் தேவர்கள் அம்ரிதம் கடிந்த போது விநாயகர் வணங்காத காரணத்தால் , கோவம் கொண்ட கணபதி அமிர்தத்தை இங்கு  மறைத்து வைத்தார் .சிவபெருமானை  தேவர்கள் வேண்ட , விநாயகர் வணங்கி பெறுக என்று கூறினார் .வினாயகரை வணங்கி அமிர்த குடத்தை பெற்றனர்.

அபிராமி பட்டர்:

    பட்டர் என்பவர் அபிராமி அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்டுஇருந்தார் .இது அங்குள்ள ஐயருக்கு பிடிக்கவில்லை.சரபோஜி மன்னர் திருக்கடவூர் கோயிலை காண வந்தார் .அவரிடம் பட்டர் பற்றி தவறாக  கூற , மன்னர் அவரின் பக்தியை சோதிக்க விரும்பினர் .பக்தியில் மூழ்கிய பட்டரிடம் நாளைக்கு என்ன திதி என கேட்க , அதற்கு பௌர்ணமி என கூறினார் .நாளை முழு நிலவை காட்டவில்லை என்றால் ,உன்  தலை வெட்டப்படும் என்றார் . 

நிலவை காட்டிய அபிராமி அம்மன் :

    தான் தவறை உணர்ந்த பட்டர் , அபிராமி மீது கொண்ட நம்பிக்கையில் , நான் காட்டுகிறான் என்றார். அபிராமி அந்தாதி பாடும் போது , தன்னுடைய காதணியை வீசி நிலவை காட்டினார்.அவர் பாடிய  பாடல்கள்  தான் அபிராமி அந்தாதி ஆகும் .இந்த விழா தை அமாவாசை அன்று நடை பெறுகிறது.மஹாவிஷ்ணுவின் ஆபராணத்தில் இருந்து அபிராமி தோன்றியதாக கூறப்படுவது சிறப்பு .

அகத்தியர் மற்றும்  புலத்தியர் வழிபட்ட லிங்கங்கள் :

    வில்வவனநாதர் பிரம்ம வழிபட்ட இந்த லிங்கத்திற்க்கு மாலை பூஜை செய்யப்படுகிறது.அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் வணங்கியபின்பே ,மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும்..காலசம்ஹார மூர்த்தி கிரக சாந்தி செய்து கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.காலசம்ஹார மூர்த்தி கிரக சாந்தி செய்து கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

ஆலய அமைப்பு  கிழக்கு மேற்கு என இரண்டு ராஜ கோபுரங்கள் உள்ளன கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்தில் முனி ஈஸ்வரர் உள்ளதால் முனீஸ்வர கோபுரம் என அலைக்கப்படுகிறது .
அமிர்தகடேஸ்வரர் மேற்கு   நோக்கியும் அபிராமி அன்னை சிவபெருமானே நினைத்து இருப்பதால் கிழக்கு  நோக்கியும் உள்ளது .கால சம்கார மூர்த்தி , பைரவர் , சப்த கன்னியர்களையும் , அம்பாள் சுற்றி சரஸ்வதி , பட்டர் காணலாம்.
இங்கு ஆறுவது வயதை  கடந்தவர்கள் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமும் செய்யப்படுகிறது பீம ரத சாந்தி சதாபிஷகம் செய்யப்படுகிறது வேலை கிடைக்கவும் பரிகாரம் செய்யபடுகிறது .

இறைவன் அமிர்தகடேஸ்வரர் 
இறைவி அபிராமி
தல விருட்சம்:வில்வம் பிஞ்சிலம்(சாதி முல்லை) 

 

                                                                கோவில் முகப்பு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...