தல வரலாறு
பிரம்மன் வழிபட்ட தலம் :
சிவபெருமான் பிரம்மனை அழித்து நீர் ஆக்கியதால் , இந்த ஊர் கடவூர் மயானம் எனவும் , பிரம்மனை உயிர்ப்பித்து மீண்டும் படைப்பு தொழில் செய்யும் ஞானம் வழங்கியதால் திருமெய்ஞானம் என அழைக்கப்படுகிறது .
மார்க்கண்டேயன் வழிபட்ட தலம் :
ஆயுள் நீட்டிக்க வேண்டி வழிபட்ட கோவில்களில் 107 வது கோவில் .
கங்கை தீர்த்தமாக தோன்றிய தலம்
மார்க்கண்டேயருக்காக பங்குனி மாதம் அஷ்வினி அன்று கங்கை தீர்த்தமாக தோன்றியது .இது காசி தீர்த்தம் , கடவூர் தீர்த்தம் எனவும் அழைக்க படுகிறது .
கோவிலை சுற்றி உள்ள உள்ள பிரம்மா தீர்த்தம் உள்ளது . காசி தீர்த்தம் கொண்டு திருக்கடையூர் அபிராமி , அமிர்தகடேஸ்வரர் அபிஷேகம் செய்யப்படுகிறது .
கோவிலின் வலது புறம் பாம்பாட்டிச் சித்தர் சமாதி உள்ளதாகவும் , வாரிய நினைத்து குறி சொல்லும் சாமியாரும் உள்ளார்.
கோவில் அமைப்பு
கோவில் அமைப்பு ராஜகோபுரம் எதுவும் இல்லாமல் மேற்கு நோக்கி உள்ளது கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் துர்க்கை, கல்யாணசுந்தரர்,பைரவர் , நடராஜர் சண்டிகேஸ்வரர் , நர்த்தன கணபதி காணப்படுகிறது .
மார்க்கண்டேயர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் முதலானவர்களுக்கு காட்சி அளித்த இறைவன்.
இங்குள்ள தட்சிண மூர்த்தி கல்லால மரம் இல்லாமல் இருக்க , அவரின் அடியில் ஆறு சீடர்கள் அமர்ந்து இருப்பது.
அம்மாள் ஸ்வாமியின் இடது புறம் தென்மேற்கு முலையில் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார்.கல்வி ஞானம் பெற இங்கே வழிபாடு செய்யப்படுகிறது
இறைவன் :பிரம்மபுரீஸ்வரர்
❤❤❤
பதிலளிநீக்கு