தல வரலாறு :
மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள் அனைவரும் தங்கத்தில் ஆன மூன்று ஆடைகளை நெய்தனர்.அவற்றில் ஒன்று இறைவனுக்கும் , மிருகண்டு ரிஷிக்கும் மூன்றாவதை நாட்டு மன்னனுக்கும் வழங்கினார்.
ரிஷி யாகம் நடத்தும் போது அவற்றை யாக குண்டத்தில் போட்டுவிட்டார் .மக்கள் அனைவரும் எங்களின் காணிக்கை ஏவ்வாறு இறைவனே சேரும் என கேள்வி கேட்க , கோவிலின் உள்ளே சென்று பாருங்கள் . உங்களுக்கு விபரம் புரியும் என்றரர்.
மக்கள் கோவிலின் உள்ளே சென்று போது , மூலவரின் மீது அந்த பட்டு ஆடை இருந்தது. மக்கள் அனைவரும் இது இப்படி நடந்தது என கேட்டனர்.
அக்னியில் போடப்படும் அனைத்து பொருட்களும் புனிதம் ஆகும். அக்னியில் பல வகை உள்ளது . அதில்பரணி என்னும் ருத்ரகாக்னி யாகத்தில் இடும் பொருட்களை இறைவனிடம் சேர்க்கிறது என கூறினார் . இது பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோயில் ஆகும் .இங்கு இறைவன் அக்னி சொரூபமாக இருப்பதால் அக்னிக்கேஸ்வரன் என அழைக்கப்படுகிறார்.
இறைவனை குளிரிவிப்பதற்கு லிங்கத்தின் கீழ் தாழ்வான பகுதி உள்ளது அதனை சுற்றி நீர் ஊற்றி இருப்பது சீறப்பு.தல விருட்சம் வில்வ மரம் ஆகும்.இந்த நாட்டின் மன்னனும் , சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனார்.புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்த , அவர் வில்வ மரத்தின் மீது அமர்ந்து கொண்டார்.புலி சென்று விட அவர் மரத்தில் இருந்து இறங்கி குண்டாங்குளம் சென்ற போது , அந்த புலி கொன்றார்.சிவபெருமான் அவருக்கு காட்சி தந்தார் .
கோவில் அமைப்பு
இங்கு ஈசன் மேற்கு நோக்கி அமர்ந்து உள்ளார் .கோவிலை சுற்றி மூன்று ராஜா கோபுரங்கள் , கருவறை சுற்றில் கணபதி , பாலமுருகன் , தட்சிணா மூர்த்தி , வீரபத்திரர் , துர்க்கை , பைரவர் , சனீஸ்வரன் உள்ளார் .இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.இறைவனுக்கு ஆடை நெய்து தந்ததால் நெய்தலாடை என வழங்க பட்டு , நல்லாடை என அழைக்கப்படுகிறது .பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் தங்களின் தோஷம் போக வழிபட வேண்டிய கோயில் .